முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள்! கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்?


கன்னியா வென்னீர் உற்று பிள்ளையார் ஆலயத்தைக் காப்பாற்றும் நோக்கோடு, தென்கயிலை ஆதின குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில் நாளை நடைபெற இருக்கின்ற தமிழரின் உரிமைப் போராட்டத்தில்  யாழ்பாணம் மற்றும் முல்லைத்தீவில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்க இருப்பதாக வடமாகாணசபை முன்நாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்த ரவிகரன், தமிழரின் இந்த உரிமைப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களை சிறிலங்கா காவல்துறை கைதுசெய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், தாம் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார்.



from onlinejaffna.com https://ift.tt/2SfNCNd