இன்னும் 5 மாதங்களில்!!!மக்களுக்கு கிடைக்கப்போவது என்ன?மைத்திரியின் அறிவிப்பு!


உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே மார்க்கம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட வைத்தியசாலையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 மாதங்களில் புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என அவர் இதன்போது கூறியுள்ளார்.

இதன்போது தூய்மையான, மனிதநேயமிக்க நாட்டை நேசிக்கும் ஊழல் மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மக்கள் தமது வாக்குப் பலத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதாரக் கட்டமைப்பையும் ஊழல் மோசடி மிகுந்த தூய்மையற்ற அரசியலைக் கொண்ட இந்நாட்டினை கட்டியெழுப்புவதற்கான ஒரேயொரு மார்க்கம், உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் என்பது நாட்டை சீரழிப்பதற்கான இலகுவான மார்க்கம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.



from onlinejaffna.com https://ift.tt/2YSQZMo